Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தயாரிப்பு தேதி இல்லை என்றால் நடவடிக்கை – உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை

உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் மிட்டாய், இனிப்பு, பிஸ்கட் மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பயிற்சி மற்றும் பதிவு உரிமம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மிட்டாய், இனிப்பு, பிஸ்கட் மற்றும் கார வகை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் அலி மற்றும் மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மிட்டாய், இனிப்பு, பிஸ்கட் மற்றும் கார வகை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் உணவுப் பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்க வேண்டும் என்றும், முகக்கவசம், கையுறை மற்றும் தலையுறை அணிந்திருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இதுபோன்ற காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95

மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *