Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிக்கு வந்த ரயில்களில் அதிரடி சோதனை

ரயில்களில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்க்கு வந்தது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் ரயிலில் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கும் லக்கேஜ் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

மேலும் ரயில் பெட்டி உள்ளே பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதிகளிலும் சந்தேகத்திற்குரிய பொருட்களையும் சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு பயணிகள் உடமைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் உள்ளனவா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *