Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்க பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டவேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ” வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குநர்” என்ற பயிற்சி திருச்சி, உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை அரசு இயந்திர கலப்பை பணிமனை திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுடைய உடையஎஸ்.எஸ்.எல்.சி. ஐ.டி.ஐ. பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.20, வ.உ.சி. சாலை, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி 620001 என்ற முகவரிக்கு வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வித்தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது

www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். பயிற்சியில் பங்கேற்பீர் ! திறன் உயர்த்துவீர் !! பயன்பெறுவீர் !!!தொடர்புக்கான தொலைபேசி எண். 0431-2460928.

மேற்கண்டதகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட  ஆட்சியர் மா.பிரதீப் குமார். அவர்கள் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *