Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அகில இந்திய வானொலி (AIR) ஹிந்தியில் ஒளிபரப்பு-துரை வைகோ கண்டனம்

அகில இந்திய வானொலி (AIR) பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எம்.பி துரை வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 5:50 முதல் இரவு 11 மணி வரை தமிழிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5:50 வரை ஹிந்தியிலும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது மறைமுக ஹிந்தி திணிப்பின் செயல்பாடாகவே உள்ளது.சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிப்பரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது டெல்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

விளம்பர வருமானம் இல்லாத குமரி FM ல் 24×7 தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஹிந்திக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல. இதை இப்படியே தொடர அனுமதித்தால் அனைத்து பண்பலையும் முழு நேரமும் ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

எனவே ஒன்றிய அரசு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, உடனே திருச்சி மற்றும் சென்னை வானொலியில் முழு நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இன்று துரை வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *