Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் பேன்சி ஸ்டோர் ஹார்டுவேர்ஸ் கடைக்குள் புகுந்த 8 அடி  நீளமுள்ள பாம்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 100 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜாகித் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஜாதிக் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க முயன்ற போது கடைக்குள் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு இருந்துள்ளது.

இதனை பார்த்த ஜாகித் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்பு ஊழியர் மோகன் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் 8 அடி நீள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *