திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியை அடுத்த வேலக்குறிச்சி எஸ். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள் (60). இரண்டு தினங்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து அருந்திய ஆபத்தான நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் இறக்கும் தருவாயில் இருந்ததால் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்ததாக கருதி உறவினர்கள் மயான பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென கண் விழித்த நிலையில் அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல்
உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments