Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது பற்றி அறிவிப்பு பதாகைகள்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சை செய்யும் வகையில், “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதலாவதாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.

இதே போன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த அறிவிப்பு பதாகைகள் கோவிலை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சமயக் குரவர்கள் நால்வரும் பன்னிரு ஆழ்வார்களும் பாடிப் பரவிய வழியில் பொதுமக்களின் விண்ணப்பத்திற்கிணங்க தமிழில் அர்ச்சனை செய்யப்படும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *