Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக திருச்சி மக்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணூர் பேரூராட்சி உட்பட்ட 12வது வார்டு பகுதியில் புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தில் இருந்து இனாம் கல் பாளையம் எல்லையில் அமைந்துள்ள காருண்ய சிட்டி மற்றும் அக்சயா கார்டன் வரை சக்தி நகர் வழியாக செல்லும் வழியில் சாலைகள் மேடு பள்ளம் குழியாக மிக மோசமாக உள்ளது.

இந்த சாலை வழியாக மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. மருத்துவ அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சக்தி நகர் பகுதியில்  900 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அடிப்படை வசதியான சாலை வசதியை ஏற்படுத்தி தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்ணச்சநல்லூர் சட்டமன்றம் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற  தொகுதிக்கு உட்பட்ட வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து, தபால் மூலம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *