திருச்சி திருவானைக்காவல் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் நகருக்கு செல்லக்கூடிய சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டிருந்தது. பின்னர் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்த இந்த சாலையில் தற்போது திடீரென பெரிய பள்ளமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் மாம்பழச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதே போன்று கடந்த 11ம் தேதி இதே இடத்தில் பெரிய பள்ளம் உண்டானது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் முதல் திருவானைக்கோவில் செல்லும் மேம்பாலம் முடியும் பகுதியில் மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வரும் பயணிகள் அம்மா மண்டபம் வழி அல்லது யாத்திரி நிவாஸ் பாதையை பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments