இன்று உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்-2022 முன்னிட்டு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உலக ஆட்கடத்தல், பெண்கள் குழந்தைகளுக்கான வன்முறையை தடுக்கும் பொருட்டு கல்லூரி அளவில் உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு குழு உருவாக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக P.அஜீம் காவல் ஆய்வாளர், குழந்தை மற்றும் மனித கடத்தல், திருச்சி மாநகரம் கலந்து கொண்டு பேசுகையில்… தற்போது பெருகிவரும் புதிய தொழில் நுட்பம் மூலம் நடைபெறும் தவறுகள் அதில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக பேசினார்.
பின்னர் இக்குழுவை வழிநடத்த மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) மற்றும் காவேரி மகளிர் கல்லுரி இருவருக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முடிவில் ஆட்கடத்தல் பற்றிய குறும்படம் மூலம் மாணவர்களுக்கு விளக்கி காண்பிக்கபட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments