Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அல கின் மூலம் செயல்படுத் தப்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். விண்ணப்பதாரர் 35 வயதுக்குட்பட்டவராக ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக கணினி இயக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். அரசு திட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றவராக வும் பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராகவும் இருத்தல் அவசியம். இருசக்கர வாகனம், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (27ம் தேதி) திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தரைத்தளம், ஒருங் கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறை கட்டிடம், கலெக்டர் அலுவலகம், (பின்புறம்) திருச்சி-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *