Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய்கனி வியா பாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

திருச்சி தஞ்சை மெயின் சாலையில் அமைந்துள்ள தனரெத்தினம் (RV) மஹால் தஞ்சை ரோடு, திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  U.S.கருப்பையாதலைவர், திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அவர்கள் தலைமை வகித்தார் அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம்

முன்னிலை :அனைத்து சங்க நிர்வாகிகள் & உறுப்பினர்கள்.கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ.10,000 /- 60 மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துரை : கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ S.இருதயராஜ் மாநகரக் கழகச் செயலாளர் மாநகராட்சி தலைவர் மண்டலம் -3, மு..மதிவாணன்

.Ve.கோவிந்தராஜுலு, மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் பாபு P.ஜெயநிர்மலாதலைவர், மண்டலம் -2, மாநகராட்சி.mkm காதர் மைதீன் Amp அப்துல் ஹக்கீம் Pks அப்துல்மாலிக் KT. தங்கராஜ் SN சேகர் மற்றும் மார்க்கெட் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் உரை மற்ற துறைக்கும் கல்வி துறைக்கும் உள்ள வேறுபாடு என்று பார்த்தால் எங்களுடைய துறைக்கு ஒரு அரசாங்கம் வெறும் முதலீட்டை மட்டும் தான் செய்து கொண்டிருக்கும் மேலும் மற்ற துறைக்கும் முதலீடு செய்தால் அந்தத் துறையில் அந்த முதலீட்டை எடுத்து விட முடியும் ஆனால் அது மன அமைதியால் முடியாது என்றும் ஒரு நல்ல சமுதாயத்தில் ஒரு வட்டியை திருப்பித் தர முடியும் என்றால் யார் மீது முதலீடு செய்கிறோம் என்றால் இங்கு அமர்ந்திருக்கின்ற மாணவச் செல்வங்கள் மீதுதான் ஆகவே எதிர்காலத்தில் ஒரு நல்ல

 தலைவராக மருத்துவராக இன்ஜினியராக வரவேண்டும் என்று அந்த எண்ணத்தில் செயல்படுகின்ற துறை தான் பள்ளிக்கல்வித்துறை என்றும் நாங்கள் அமைச்சராக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனால் நாங்கள் படித்த படிப்பு தான் இறுதிவரை எங்கள் கூடவே வரும் என்றும் மேலும் இங்கு வருகை புரிந்திருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களது கடைகளை வைத்துக்கொண்டு தங்களது சக்திக்கு மீறி தாங்கள் வியாபாரம் செய்து

 கொண்டு மாணவர்களாகிய பிள்ளைகள் உங்களுக்கு நேரத்தை ஒதுக்கி இங்கு வந்திருக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு வகையான தியாகம் தான் என்றும் மேலும் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது என்றும் எனக்கு இந்தத் துறை பிடித்திருக்கிறது நான் இந்த துறையில் சாதிப்பேன் என்று தேர்வு செய்து மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் அந்தந்த

 துறையில் படிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களாகிய நீங்கள் அதற்கு முழுவதுமாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் மேலும் பெற்றோர்களின் கஷ்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அது மாணவச் செல்வங்களாகிய உங்களால் தான் முடியும் என்றும் அதற்கு நீங்கள் நன்றாக படியுங்கள் என்றும் அவ்வாறு படித்தால் பெரிய படிப்பு படித்து பெரிய வேலைக்கு நீங்கள் சென்று பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார்

 மேலும் படிப்புக்கு தடையாக எது வந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறும் முதல்வரை தான் நாம் பெற்று இருக்கிறோம் என்றும் மேலும் இந்த காந்தி மார்க்கெட் வியாபார சங்கத்திற்கு இதுபோல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர்களை வாழ்த்துவதாகவும் எடுத்துரைத்தார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *