Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா திருச்சி மாவட்டம் சார்பாக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா தூய வளனார் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட் சென்னி வரவேற்றார். திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) சங்கரநாரயணன் தலைமையேற்று, மாவட்ட உதவி அலுவலர் அன்பு சேகரன் முன்னிலை வகித்து, தன்னார்வலர்களுக்கு பொன்னாடை, விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.  

அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தாமஸ் ஜெயசீலன், ஜோசப் தனராஜ், நடேசன், ரவி சோழமுத்து, ஹேமலதா, டேவிட் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் இல்லம் தேடிக் கல்வி பற்றி வீடியோவாக ஒளிபரப்பினார்.காந்தி விழிப்புணர்வு பாடல் பாடினார்.

தன்னார்வலர்கள் கலைச்செல்வி, ரகிலா பேகம் ஏற்புரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் கேசவன், அன்பு வசந்தன், சந்தியா மார்க்கிரேட், வில்பர்டு சவரிமுத்து, சண்முகம், ஆகியோர் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் பெல்சிட்டா மேரி தொகுத்து வழங்கினார்‌. ஒருங்கிணைப்பாளர் ஞான ஜெயசீலன் நன்றி கூறினார் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *