Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நெருங்கும் தீபாவளி – மக்கள் கூட்டத்தில் விமான நிலையங்கள்!!

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் 15 நாட்களுக்கு முன்பிருந்தே வெளிநாட்டு விமான சேவைகள் அளிக்கும் விமானங்களின் டிக்கெட் விலைகள் அதிகரித்துள்ள சூழலிலும் திருச்சிக்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி உபைதுல்லா பேசுகையில் சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பியே வருகிறது. இங்கிருந்து செல்லும் விமானங்களின் முன்பதிவுகள் குறைவாக இருப்பது போல் தெரிந்தாலும், கடைசி நிமிடத்தில் டிக்கெட் போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதனால் விமானங்களின் அனைத்து இருக்கைகளும் தீர்ந்துத்து விடுகிறது. ஏற்கனவே 15 நாட்களுக்கு முன்பு ஏறுய டிக்கெட் விலைகள் தற்போது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உள்நாட்டு விமான டிக்கெட்களை பொறுத்தவரை பெரிதளவில் விலையேற்றம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு விலை ஏறியுள்ளது. 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை பொறுத்தவரை தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாது, வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் மக்கள் பயணிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேற்கூறிய வழிதடத்தில் விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *