திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம், பூவாளுர் 110 / 33 -11 கிவோ துணைமின் நிலையத்தில் வரும் (18.06.2024) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளபட இருப்பதால்,
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இலால்குடி நகர் பகுதியில் – அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளுர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம்,
மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனர், பெருவளநல்லுர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இலால்குடி இயக்கமும் காத்தலும் செயற்பொறியாளர் பொறிஞர், மு.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments