Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (26.11.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் மோட்டார் பம்ப் செட்டுகள் மராமத்து செய்யும் பணி (26.11.2023) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லை நகர், அண்ணா நகர், புத்தூர் புதியது, காஜாப்பேட்டை புதியது, காஜாப்பேட்டை பழையது, கண்டோன்மெண்ட் புதியது, கண்டோன்மெண்ட் பழையது, ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நாளை (26.11.2023) விநியோகம்இருக்காது .

மறுநாள் (27.11.2023) அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *