Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (21.06.2022) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்கான உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நாளை (21.06.2022) காலை 09.45 மணி முதல் மாலை 4 மணிவரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

இதனால் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தணீர்புரம், சங்கிலியாண்டபுரம் 

பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தா நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரி, கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமான நிலைய பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே நகர், தென்றல் நகர், ஆனந்த நகர், சத்தியவானி, முத்துநகர், அய்யப்பநகர் 

கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வநகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டி புதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளுக்கு நாளை (21.06.2022) ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.

நாளை மறுநாள் (22.06.2022) வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *