திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை (26.12.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம்,
கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர் அருணா தியேட்டர், கணபதிபுரம் தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீமநகர்,
செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (26.12.2024) வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும் & காத்தலும், செயற்பொறியாளர் பொறிஞர் K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments