Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கா.ச. ஜீவானந்தன் வரவேற்புரை வழங்கினார். திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அ.ஜோசப் அந்தோணி அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், செயற்கை நுண்ணறிவு பற்றி பயிற்சி இளம் வயதில் கற்றுக் கொள்வதால் வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், மேலும் மாலை நேரத்தில் பள்ளி மாணவருக்கு ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி கணினி வாயிலாக அளிக்கப்படும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்து நேற்று நிதிநிலை அறிக்கையில் கூறி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ப. அர்ஜுன் முன்னிலை உரையில் கூறியதாவது….. எதிர்கால திட்டமிடலுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி உதவுகிறது. பில்கேட்ஸ் மாணவ பருவத்தில் மேற்கொண்டு கற்று கொண்ட முயற்சியே இன்று அவர் வளர்ச்சியடைய முக்கிய காரணம். AI தொழில்நுட்பம் வாயிலாக நாம் ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள கூட உதவுகிறது.

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி கணினி அறிவியல் துறை ஆராய்ச்சி அறிஞர் எஸ்.ஹரிஷ் தம் சிறப்புரையில்….. செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும் . இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவியலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது. இச்செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது.

நுண்ணறிவுப்பயன்பாடுகளில் மேம்பட்ட வலைத் தேடுபொறிகள் (எ. கா. கூகுள் தேடல்) பரிந்துரை அமைப்புகள், (யூடியூப், அமேசான், நெட்பிளிக்சு) மனித பேச்சைப் புரிந்துகொள்வது (சிரி, அலெக்சா போன்றவை), தானோட்டிச் சீருந்துகள், (எ.கா, வேமோ குழும ஊர்திகள்), பொது அறிதிறன் உருவாக்கும் ஆக்கக் கருவிகள் (அரட்டைGPT, செயற்கை அறிதிறன் கலை), உயர்நிலை ஆட்ட நுட்ப விளையாட்டுகளில் போட்டியிடல் (சதுரங்கம்), Go) போன்றவை உள்ளடங்கும். செயற்கை நுண்ணறிவு 1956 ஆம் ஆண்டில் ஒரு கல்வித் துறையாக டார்த்மவுத்து பணிப்பட்டறையில் நிறுவப்பட்டது.  செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் பல்வேறு துணைத் துறைகளையும் குறிப்பிட்ட குறிக்கோள்களையும், குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாட்டையும் மையமாகக் கொண்டுள்ளன என கூறினார்.

கே முத்துக்கருப்பன் AI -பொறியாளர், BigLearn செயற்கை நுண்ணறிவு முக்கியத்துவம் பற்றியும் செயற்கை நுண்ணறிவு செயலி பற்றியும் விளக்கி கூறினார். ஓய்வு பெற்ற முதல்வர் S. சிவகுமார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் மாணவர்களுக்கு கைபேசி மூலம் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வினா – விடை தயாரித்தல், கதை உருவாக்குதல், படம் வரைதல், நாடகம் உருவாக்குதல், ஆங்கிலத்தில் பேசுதல், பற்றி பயிற்சி வழங்கினார்.

பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் ஆசிரியை தி.சர ண்யா நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *