Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழ்நாடு குழந்தைகள் கூட்டமைப்பு அண்ணா ஸ்டேடியத்தில் நடத்திய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

No image available

தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் நடத்தும் 1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ரோலிங் கோப்பைகளுக்கான 8வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள் தடகள சாம்பியன்ஷிப்பை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடத்தினர். மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 25 பள்ளிகளில் இருந்து கிட்டத்தட்ட 1100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

7 ஆம் தேதி காலை திருச்சி தேசிய கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் டி பிரசான பாலாஜி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 8 ஆம் தேதி மாலை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருமதிஎம்.சங்கரி முத்துசாமி – சர்வதேச தடகள வீரர், வணிக கண்காணிப்பாளர்

திருச்சி- தெற்கு ரயில்வே ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். மற்றும் திரு. ஆர்.கருணாகரன் – செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் நன்றி தெரிவித்தனர். 8வது ஆண்டாக பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள் தடகள சாம்பியன்ஷிப்பை 1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ரோலிங் கோப்பைகளுக்காகவும், மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ரோலிங் கோப்பைகளுக்காகவும் இரண்டு வகையிலான போட்டி நடைபெற்றது. இதில் 1 வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் மணவரகள் பிரிவில் முதல் இடத்தை பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும், இரண்டாம் இடத்தை ஆர் எஸ் கே சிபிஎஸ்இ பள்ளியும், மூன்றாவது இடத்தை பாய்லர் பிளாண்ட் நடுநிலைப் பள்ளியும் பெற்றன.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *