Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஈஎஸ்ஐ மருத்துவர் மீது தாக்குதல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் எலும்பு முறிவு மருத்துவரை சிலர் தாக்கியுள்ளனர். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் மருத்துவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் அவர் கண், காது ஆகியவை பலத்த காயமடைந்துள்ளது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவரை தாக்கியவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவமனைகள் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மருத்துவமனை பகுதிகளை பாதுகாப்பான இடமாக்க வேண்டும் வேண்டுமென மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி மாவட்டம் லால்குடி ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பிய போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இச்சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *