Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

50 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (30.12.2024)-ம் தேதி காலை 09:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம், உதவி ஆணையர் கலால் மற்றும் மண்டல துணை இயக்குநர் அரசு தானியங்கி பணிமனை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் தொகை (முன் வைப்பு தொகை) தொகையாக வாகனங்களுக்கு 2000/- செலுத்தி ஏலம் கோர வேண்டும். ஏலத்தொகையுடன் தனியாக 18% சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். ஏல கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் (30.12.2024)-ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.வருண்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *