Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர்,ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K.P.செபாஸ்டியன் தலைமையில்

திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக இன்று (30.01.2025) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் கோவை அம்ருதா பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை பற்றி விளக்கி கூறினர்.

 ✓ரயில் தண்டவாளத்தை கடக்காதீர்கள் மற்றும் உங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்.

 ✓ரயில்தடங்கள் ரயில்களுக்கு மட்டுமே.

 ✓ரயிலின் படியில் பயணம் செய்ய வேண்டாம்.

 ✓ஓடும்/ நகரும் ரயில்களில் நுழையவோ/தடுக்கவோ வேண்டாம்.

 ✓ ஓடும் ரயில்கள்/ ரயில் பாதைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம்.

✓ சர்க்கஸ் சாதனைகளில் ஈடுபட வேண்டாம்.

 ✓ரயில் பாதையில் கல்லை வைக்காதீர்கள், அது ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

 ✓ரெயில்வே வழியாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் / பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேற்கூறிய நடவடிக்கைகளின் தீவிரத்தன்மை மற்றும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், மேற்கூறிய செயல்களை தடுப்பதற்காக மாணவர்களால் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுமார் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *