Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தில்லைநகர் காவல் நிலையம் சார்பில் குழந்தை உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்படி, துணை காவல் ஆணையர் (வடக்கு) அறிவுறுத்தலின்படி, தில்லைநகர் சரக காவல் உதவி ஆணையர் ஆலோசனையின் பேரில் 01.04.2022 தில்லைநகர் காவல் நிலையம் சார்பில் குழந்தை உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்றது. தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் சிந்துநதி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பதில் குழந்தைகளின் பங்கு, போதை பொருளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

பள்ளி மற்றும் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும் தவறான செயல்கள் நடைபெற்றால் அது குறித்து அச்சமடையாமல் உடனே அபகுதிகளுக்கு ரோந்து வரும் காவலர்களிடம் சொல்லலாம். அல்லது உங்கள் தலைமையாசிரியர் அவர்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் மாணவர்களின் பங்கு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகியன உள்ளது. உங்கள் வீட்டிலோ, பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களலோ பாதுகாப்பு குறைபாடு எற்பட்டால் உடனே சொல்ல வேண்டும்.. மேலும் அந்நியர்கள் யாரையும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது. செல்போன் கொண்டு யாராவது வீடியோ காட்டினாலும் உடன் அது பற்றி தகவல் தர வேண்டும். உங்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் தந்து பேசினார்..

காவலர் நிறைவாழ்வு பயிற்சித் திட்ட பயிற்றுனர் மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர் பிரபு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றம் என்பது குறித்தும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், துரைராஜ், தலைமைக்காவலர் சித்ரா, ராஜாபெரியசாமி, நாகநாதர், ராஜதுரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்1098, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *