Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், சிறுபான்மை இஸ்லாமியர் மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதாகவும்,

Advertisement

தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் பள்ளிவாசலை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் பள்ளிவாசல் இடிப்பு தினமான இன்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பாலக்கரையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலமான பாபர் பள்ளிவாசலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.

 Advertisement

நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் வருடம்தோறும் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *