Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாதுகாப்பு காரணம் கருதி 2 நாட்கள் தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (21.01.2025) சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்து,

திருச்சிராப்பள்ளியிலிருந்து சாலை வழியாக சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (20.01.2025) முதல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் நாளை (21.01.2025) வரை மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது. எனவே (20.01.2025) முதல் (21.01.2025) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *