Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அடிப்படை வசதிகள் பலத்த பாதுகாப்போடு தேர்தலுக்காக 3 நாட்கள் தற்காலிக பேருந்து நிலையம் 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 06.04.2021 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருப்பதால், பொது மக்கள் அவர் தம் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக 05.04.2021, 06.04.2021 மற்றும் 07.04.2021 ஆகிய தேதிகளில் வாக்களிக்க சென்று, திரும்பும் நாட்களில் திருச்சி மாவட்டத்தின் நகரப் பகுதியல் போக்குவரத்தினை சீர்செய்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறின்றி பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் புறநகர் பேருந்துகளை முறையே மன்னார்புரம் மதுரை அணுகுசாலை அருகிலும், சோனா–மீனா தியேட்டர் அருகிலும், கல்லுக்குழி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகச்சாலை அருகிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் வரை  இயக்கப்படும் நகரப் பேருந்துகளை மத்திய பேருந்து நிலைய தஞ்சாவூர், மார்க்கமாக இயக்கிய புறநகர் தட பகுதியில் இருந்து (பொதுமக்களின் வசதிக்காக தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்டது போல்) இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு இணைப்பு நகரப் பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் காவல்துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பும்,  மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொது கழிப்பிட வசதி மற்றும் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *