Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பக்தி பரவசம் – ஆத்திரத்தில் பெட்ரோலை தெளித்துவிட்ட கணவர் – தீயில் சிக்கிய குடும்பம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56) விவசாயி. இவரது மனைவி ஹேமா பிந்து (50). மகன்கள் குணசேகர் ( 20 ), குருசாமி (20) இவர்கள் இருவரும் பொறியியல் படித்து வருகின்றனர். மகள்களான ஹர்சினி இவர் தனியார் மருத்துவர் நிறுவனத்தில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹேமா பிந்துவிற்கு பக்தி மார்க்கம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் அமர்ந்து பூஜை அறையில் சாமி கும்பிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இது ராஜேந்திரபிரசாத்திற்கு பிடிக்காமல் போய் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்களின் மீது ஊற்றி உள்ளார். அப்பொழுது சாமி அறையில்எ ரிந்து கொண்டிருந்த தீப விளக்கில் பட்டு அவர்கள் மீது தீ பரவி உள்ளது.

இதில் ஹேமா பிந்துமீது தீ பரவியதால், அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் குணசேகர், குருசாமி ஆகியோருக்கு சிறிய அளவில் தீக்காயமும், பெட்ரோலை வீசிய ராஜேந்திர பிரசாத்திற்கு பெரிய அளவில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த நான்கு பேரையும் வீட்டிலிருந்தவர்கள் வீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில் ஹேமா பிந்தவும், ராஜேந்திர பிரசாத் ஆபத்தான நிலையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *