Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு பூமி பூஜை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், நகர் கிராமத்தில் நீர்வளத் துறையின் சார்பில் மேல் பங்குனி வாய்க்காலின் குறுக்கே ரூபாய் 14.91 கோடி மதிப்பீட்டில் இடைநிலை நீரொழுங்கியினை புனரமைக்கும் பணிகளை இன்று (09.02.2024) அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் சிவக்குமார் செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் முருகானந்தம்,

உதவி பொறியாளர்கள் ஹரி கிருஷ்ணபிரபு, ராஜா, ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *