Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்காக 3வது இரத்ததான முகாம் – இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், தேவர் பூங்கா நண்பர்கள் குழு மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை இன்று வரகனேரி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்படும் 3வது மாபெரும் இரத்ததான முகாம் இது. திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள்,  சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ரத்த தானம் நடைபெறுகிறது. இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இந்த கோட்டை ரோட்டரி முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளன. இன்று நடைபெற்ற முகாமில் சுமார் 50 பேர் ரத்ததானம் அளித்தனர்.

இந்நிகழ்வில் கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn. நாகராஜன், Rtn. கோவிந்தராஜன், முன்னாள் தலைவர் Rtn.பாஸ்கரன் மற்றும் சேவை திட்ட இயக்குனர் Rtn.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *