Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி ஆற்றில் மூழ்கியவரின் உடல் மீட்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு கட்டுரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் திக கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜராஜன் என்ற மகன் விடுமுறையில் வீட்டிற்கு அண்மையில் வந்திருந்ததாகவும்,

இந்த நிலையில் தனது வீட்டின் அருகில் உள்ள நண்பனுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வேங்கூர் பூசத்துறை பகுதியில் குளிக்க சென்றதாகவும், அப்படி குளித்த பொழுது தண்ணீர் ஆழத்தில் ராஜராஜன் இறங்கியதால் மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதை கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நண்பன் எவ்வளவு கத்திகூச்சலிட்டும் எந்தவித பயனும் இல்லாததால்,

மேலும் இது சம்பந்தமாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கனகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ராஜராஜனின் உடலை தேடும்பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த தீயணைப்புத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக 10த்திற்கு மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி தேடி வந்தனர்.

ஆனால் நீண்ட நேரம் தேடியும் ராஜராஜன் உடல் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இன்று காலை கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து தோகூர் போலீசார் மற்றும் ராஜராஜனின் உறவினர்களும் சென்று பார்த்த பொழுது அது ராஜராஜனின் உடல் தான் உறுதி செய்யப்பட்டது. பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *