Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கொதிகலன் வெடித்ததில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறை அடுத்த பாலப்பட்டி பிரிவு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையம் (திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறப்படும் பாலை குளிரூட்டப்பட்டு பின்பு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதே போல் இன்று காலையில் பால் குளிரட்டும் நிலையத்தில் உள்ள நீராவி கொதிகலன் வெடித்து அமோனியம் குளோரைடு வாயு கசிந்தது.

கொதிகலன் வெடித்ததில் தொழிற்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் பல அடி தூரம் பறந்து சென்றது. பணி செய்பவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அமோனியம் குளோரைடு வாயு கசிவு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை சென்ற பொது மக்களுக்கும் சுற்று வட்டார பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *