Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

புத்தகத்திருவிழா விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் இருந்து புத்தகத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணியை தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ரயில்வே ஜங்ஷன், மன்னார்புரம், காஜாமலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,  சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *