Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தேக்கமலை கோவில்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(36). இவர் இலுப்பூர் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி(33), இவரது அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் கதவின் உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த எட்டேகால் சவரன் நகை மற்றும் ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 

இதேபோல் பொன்னம்பலம்பட்டி ஊராட்சி சேசலூரை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை ஊழியாரான சி.சின்னசாமி(28) வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த முக்கால் சவரன் நகைகள் மற்றும் ரூ.2.36 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கசாமி, மாலிக் ஆகியோர் தலைமையிலான வையம்பட்டி போலீஸார், திருட்டு சம்பவம் குறித்து மோப்ப நாய் லீலி, கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *