Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே கார் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 நபர்கள்

சென்னையை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் சியாம் சுந்தர் அவரது நண்பர்கள் உள்பட மூன்று பேர் திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *