திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (47). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் லயன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் மாராடி கிராமத்தில் இருந்து கட்ட பள்ளி செல்வதற்காக தனது காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்லும் வழியே தரப்பாலம் உள்ளது. மீபத்தில் இப்பகுதிகள் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. காற்றாற்று வெள்ளம் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது அப்பொழுது ஜான் தண்ணீர் குறைவாக வருவதாக கருதி தரைப்பாலத்தை காரில் கடக்க முயற்சி செய்தார்.
தரை பாலத்தின் பாதி தூரம் சென்ற நிலையில் தண்ணீர் காரை இழுக்க ஆரம்பித்தது. இதனால் பயந்து போய் காரின் கதவை திறந்து ஜான் பத்திரமாக உயிர் தப்பினார். உடனடியாக இது பற்றி நண்பர்களுக்கி தகவல் தெரிவித்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தனது காரை மீட்கும்படி உதவி கூறினார்.
அதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி எந்திரத்தினுடன் வந்தனர். பின்னர் இயந்திரம் மூலம் பத்திரமாக காரை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments