Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி 15த்திற்க்கும் மேற்பட்ட வாகனங்களை  மோதிய கார் – காவல்துறை விரட்டிய சம்பவம்

தஞ்சாவூர் ரஹ்மானியா தெருவை சேர்ந்த ஆரோக்கியா லூர்து நாயகம் என்பவர் திருச்சிக்கு காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது வரிசையாக 15 இருக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார்களை மோதி நிற்காமல் வந்துள்ளார். திருச்சி மாவட்ட காவல் எல்லையான திருவெறும்பூர் காவல் சரக்கத்திற்கு வந்த பொழுது காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்டனர். காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி பின்னர் திருச்சி  பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் பிடித்துள்ளனர் .

அந்த காரின் முன் பக்க டயர் முழுவதும் சேதம் அடைந்துதோடு ஓட்டி வந்துள்ளார் . அவரிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த ஆவணமும் அவரிடம் இல்லாத நிலையில் கார் யாருடையது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர் ஓட்டியகாரில் முன்பக்கம் திமுகவின் கொடி இருந்துள்ளது. மேலும் பின்பக்கம் தமிழக முதல்வர், உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் அக்காரில் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *