Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சீமான் மீது வழக்கு – மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதூறாக பேசியது தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் மனு தாக்கல் வருண்குமார் செய்தார். 

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் ஆஜரானார். மேலும் இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். பின்னர் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்…. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசி உள்ளார்.

சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ஐபிஎஸ் என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது?

இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். டிஐஜி வருண் குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்த போது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை வரும் (21.01.2025)ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *