Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட வாய்தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு பதிவு

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள அல்லூரில் கடந்த 2 தேதியன்று சிவன் கோவில் வளாகத்தில் ஊராட்சிமன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்தில் அல்லூர் மேலபச்சேரியை சேர்ந்த ஆனந்த என்பவர் கேள்வி கேட்கும் போது ஊராட்சி மன்ற தலைவர்உனக்கு ஏன் பதில் கூறவேண்டும் என்ன கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு என்றும்,மேலும்  சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது.   

மேலும் கடந்த  10 தேதி  தனது மனைவியுடன் காரில் செல்லும் போது காரை வழி மறித்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஆனந்த என்பவர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். 

புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் விஜயேந்திரன் அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ,பிரபாகரன்,மணிகண்டன்
,பாரத்,விக்ரம்(எ) வீரப்பன் ஆகியோர் மீது ஜீயபுரம்போலீஸ் துணை சூப்பிரண்டு ( பொறுப்பு) சுப்பையா (sc st Ct 2005) உள்ளிட்ட 5பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *