Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் தனியார் பேருந்து மோதி பசுமாடு பலி – காவலுக்கு வந்த நாய் பரிதவிப்பு

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு உள்ள புற்களை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து பசு மாட்டின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது. இந்த மாட்டினுடன் வந்த நாய் யாரையும் அருகில் செல்ல விடாமல் குரைத்தபடி நின்று கொண்டிருந்தது. திருச்சி மாநகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கக்கூடிய கால்நடைகளை சாலைகள் விடாமல் மாட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில், இன்று தனியார் பேருந்து மோதி பசுமாடு உயர்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *