Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேமுதிக கட்சியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படும் – திருச்சியில் விஜயபிரபாகரன் பேட்டி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லதுரை மீனா திருமணத்தை நடத்தி வைத்த விஜயபிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக கட்சி தொய்வாக இருப்பது என்பது தவறு. அதிமுக, திமுக கட்சிகள் தோல்வியை தழுவிய போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் உள்ளோம். தேமுதிக கட்சியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படும்.  

தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. கேட்பன் கூறுவது போல ஒரு ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிந்த நிலையில் தான் அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

கேட்பன் சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை நிறுவனத் தலைவர் கேப்டன் அறிவிப்பார் எனக் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *