Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சத்திரம் பேருந்து நிலையம் நாளை (04.01.2022) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும். அரசின் வழிகாட்டுதல்படி தடுப்பூசியானது பள்ளி அடையாள அட்டை, ஆதார் கார்டு, காண்பித்து பெற்றோரின் ஒப்புதல் கடிதம் வழங்கி தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தபட உள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு… திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும். 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இடங்களுக்கும் 50 சதவீத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி முககவசம் அணிந்து நோய்த் தொற்றை தடுக்க வேண்டும். ஒமிக்ரானுக்கு ஆக்சிஜன் தேவைப்படாது. இருந்தாலும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். திருச்சி இரண்டாம் தலைநகரமாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மணப்பாறை சிப்காட்டில் ஆயுத தளவாடங்கள் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். புறநகர் பகுதிகளில் அரை வட்ட சாலை பணிகள் முழுவதும் நிறைவுபெறும் நிலையில் புதிய வியாபாரங்கள் நடைபெறும். அடிப்படை வசதிகள் முழுவதும் திருச்சிக்கு கொண்டு வந்து சேர்க்கும். 

புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட முதலமைச்சரிடம் அனுமதிபெற்று, 45 நாட்களுக்குள் டெண்டர் விடப்பட்டு பின்னர் ஒரு வருடத்திற்குள் புதிய பேருந்து நிலையம் பணி நிறைவுபெறும். இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையம் நாளை (04.01.2022) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் குறிப்பிட்டார். 

ஓமிக்கிரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தயாராக உள்ளது. மாஸ்க் தான் பெரிய மருந்து, மூன்று நாட்களுக்குள் பாஸிடிவ் என்பது நெகட்டிவ் ஆக மாறியுள்ளது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *