Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

செஸ் ஒலிம்பியாட் போட்டி -தன்படம் எடுக்கும் விழிப்புணர்வு பதாகை

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டரங்கில், செஸ் விளையாட்டு தன்படம் எடுக்கும் விழிப்புணர்வுப் பதாகை அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (19.7.22) தன்படம் எடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டரங்கில், செஸ் விளையாட்டு விழிப்புணர்வுப் பலகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,  கையெழுத்திட்டு, இளம் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் கோ. தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வட்டாட்சியர் த.கலைவாணி மற்றும் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *