Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முதலமைச்சர் கோப்பை – வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்கள்

திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (20.10.2024) வழங்கி பாராட்டினார்கள்

(2024-25) ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் (06.10.2024) முதல் (23.10.2024) வரை திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளுக்கான தொடக்க விழாவை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு (06.10.2024) அன்று தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை (2024-25) விளையாட்டுப் போட்டிகள் பள்ளி. கல்லூரி, பொதுபிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், மேசைபந்து, கோ-கோ. சிறப்பு கையுந்துபந்து, வீல்சேர். டேபிள் டென்னிஸ் மற்றும் எறிபந்து போட்டிகள் (10.09.2024) முதல் (24.09.2024) வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் / குழு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் (06.10.2024) முதல் (23.10.2024) வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் 38 மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் கலந்து கொண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் (18.10.2024) முதல் (20.10.2024) வரை கல்லூரி மாணவிகளுக்கான மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான கேரம் விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் ஒற்றையர் பிரிவு, கல்லூரி மாணவிகள் ஒற்றையர் பிரிவு மற்றும் கல்லூரி மாணவர்கள் இரட்டையர் பிரிவு, கல்லூரி மாணவிகள் இரட்டையர் பிரிவு ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (20.10.2024) பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன், மண்டல தலைவர் மதிவாணன், மண்டல முதுநிலை மேலாளர் (விளையாட்டுத்துறை) மா.செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *