Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அன்பில் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா

No image available

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது.

அதன் பேரில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தேர் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் திருப்பணியாளர்கள் கொண்டு கோவில் உள் பிரகாரத்தில் சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை அடுத்து இன்று விடையாற்றி விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அன்பில் மாரியம்மன் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *