Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாநகராட்சி 37 வது வார்டுக்கு உட்பட்ட அம்மாக்குளம், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் சரியாக வந்து கொண்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரு வாழ்வு மாநகராட்சி உதவி பொறியாளர் வினோத் திறந்துள்ளார்.  அப்படி புதிதாக கூடுதலாக வாழ்வு திறந்து தண்ணீர் அழுத்தம் குறையும்.  இதனால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைக்காது என கூறியுள்ளனர்.  அதை வினோத் ஏற்றுக்கொள்ளாமல் வாழ்வை திறந்து உள்ளார். இதற்காக அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 அப்பொழுது உங்களுக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்க்கிறேன் என கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வருவதாகவும், அதுவும் பத்து நிமிடம் மட்டுமே வருவதாகவும், அப்படி வரும் தண்ணீரை சுகாதார இல்லாமல் கலங்கலாக சேரும் சகதியமாக வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் இன்று காலை திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *