Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் பொதுமக்களின் மனுக்கள் மீது குறைகள் தீர்ப்பு முகாம் – 127 மனுக்களுக்கு உடனடி தீர்வு!!

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணைய வழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டதின் பேரில் திருச்சி மாநகர அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

Advertisement

அதன்படி திருச்சியில் 4 இடங்களில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய சரகத்தில் சுமங்கலி மஹாலிலும், பொன்மலை சரகத்தில் SIT வளாகத்திலும், கோட்டை சரகத்தில் சந்தன மஹாலிலும் மற்றும் ஸ்ரீரங்கம் சரகத்தில் எஸ்.என்.மஹாலிலும் மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் நேரடியாக வரவழைக்கப்பட்டு 177 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. அதில் 154 மனுதாரர்களும் 143 எதிர் மனுதாரர்களும் ஆஜராகி இருந்தனர்.

Advertisement

இருதரப்பையும் விசாரணை செய்து மேற்படி 177 மனுக்களில் 127 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனு மீது விசாரணை செய்யப்பட்டு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *