Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அமைச்சர் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு நிபந்தனை ஜாமின் 

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் கடந்த 15ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அருகே சிவா எம்.பி வீடு உள்ளது.அங்கு திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் நேருவிற்கு எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்.பி யின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், எம்பி வீட்டில் உள்ள நிறுத்தப்பட்டிருந்த கார் இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய பத்துக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பொழுது காவல் நிலையத்திற்குள் புகுந்து எம்.பி ஆதரவாளர்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம்  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது முன்னாள்  வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கு ஜாமின் மனு கடந்த (20.03.2023) திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து 2வது முறையாக (23.03.2023) அன்று தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை  நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி மனுவை நிராகரித்தார்.  இதன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இன்று திருச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபுவிடம் ஐந்து பேருக்கான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் மறு உத்தரவு வரும் வரை மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *