Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி – திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் மூலம் திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுக்கா, மணக்கால் சிறுதையூர் – செங்கரையூர் சாலையில் உள்ள இரயில்வே கடவு எண் எல்.சி.226க்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்த இரயில்வே மேம்பாலத்தின் அஸ்திவாரத்திற்காக அமைக்கக்கூடிய பைல்களின் (Piles) தாங்கு திறன் சோதனை நடத்த வேண்டியுள்ளதால் சிறுதையூர் – செங்கரையூர் சாலையில், இலால்குடி ரவுண்டான முதல் கொப்பாவளி வரை (16.02.2024) அன்று முதல் பைல்களின் தாங்கு திறன் சோதனை முடியும் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

புதிய போக்குவரத்து மாற்றம் எனவே இலால்குடியிலிருந்து அன்பில் செல்லும் மற்றும் திரும்ப வரும் அனைத்து வாகனங்களும் லால்குடி ரவுண்டானாவிலிருந்து சிறுதையூர் செங்கரையூர் சாலை வழியாக, திருச்சி – சிதம்பரம் சாலை, பூவாளூர் – ஆலங்குடி சாலை மற்றும் காட்டூர் கரும்பு அபிவிருத்தி சாலை வழியாக கொப்பாவளி வழியாக செல்ல வேண்டும்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றமானது (16 02.2024) முதல் சுமார் மூன்று வார காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பயணிகள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *