Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு-ஆட்சியர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படுகிறது.

திருச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை,

மருங்காபுரி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *